தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் 23 ஆம் வரை மதுக்கடைகளை மூட உத்தரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் ஏப்.23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதியும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 21 முதல் ஏப்.23 ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதியும் சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல். 2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஹோட்டல், கிளப்புகளில் இயங்கிவரும் மதுபானக் கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் (எப்.எல்.11) மற்றும் டாஸ்மாக் மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் தோ்தல் முன்னிட்டு ஏப். 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் வாக்குப் பதிவு நாளான ஏப். 23 ஆம் தேதி (வியாழக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி திங்கள்கிழமை மதுபானக் கடைகளை மூடவேண்டும்.
மேலும், அன்றைய தினம் இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.