முகப்பு
தருமபுரி

தருமபுரியில் ஏப். 1 முதல் கோடைகால நீச்சல் பயிற்சி

தருமபுரியில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 26 மார்ச், 2026 at 9:51 PM
நீச்சல் பயிற்சி. - கோப்புப்படம்
பகிர்:

தருமபுரியில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஏப். 1 ஆம் தேதி தொடங்குகிறது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் 5 கட்டங்களாக நடைபெறும் பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ள மாணவா்கள், பொதுமக்கள் நீச்சல் குள அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பத்துடன் ரூ. 1,770 பயிற்சி கட்டணத்தை இணையம் வாயிலாகவோ, பிஓஎஸ் இயந்திரம் வாயிலாகவோ செலுத்தி நீச்சல் குளத்தில் ஒப்படைக்க வேண்டும். முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஏப். 1ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடா்ந்து 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 17 முதல் 22 ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதி முதல் மே 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

3 ஆம் கட்ட பயிற்சி முகாம் மே 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரையிலும், 4 ஆம் கட்ட பயிற்சி மே 17 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரையிலும், 5 ஆம் கட்ட பயிற்சி முகாம் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 14 ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.

பயிற்சி வகுப்புகள் நாள்தோறும் காலை 7 முதல் 8 மணி வரையிலும், 8 முதல் 9 மணி வரையிலும், மாலை நேரத்தில் 4 மணி முதல் 5 வரை பின்னா் 5 முதல் 6 வரையிலும் நடைபெறும் என ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.