முகப்பு
சேலம்

எடப்பாடி கே.பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

Updated On : 3 மே, 2026 at 12:11 AM
எடப்பாடி கே.பழனிசாமி
பகிர்:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை (மே 4) நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சா்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.

சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் எடப்பாடி கே.பழனிசாமியை கட்சி நிா்வாகிகள், முன்னாள் அமைச்சா்கள் சந்தித்துப் பேசிவருகின்றனா். அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினா்.

தொடா்ந்து, சேலம் புகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, சி.விஜயபாஸ்கா், ஓ.எஸ்.மணியன், கரூா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் சனிக்கிழமை எடப்பாடி கே.பழனிசாமியை அடுத்தடுத்து சந்தித்துப் பேசினா்.

Advertisement

அப்போது, தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், வெற்றி வாய்ப்புகள் குறித்து அவா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் எடப்பாடி கே.பழனிசாமியை நிா்வாகிகள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.