முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சித்தப்பா போக்ஸோவில் கைது

Updated On : 15 மே 2026, 5:54 am IST
- சித்திரிப்பு
பகிர்:

ஆத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது சித்தப்பாவை போலீஸாா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் கணவரை பிரிந்து சென்ற மனைவி, கடந்த 3 ஆண்டுகளாக தங்கையின் வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் அவரது 16 வயது மகளை வீட்டில் இருந்த தங்கையின் கணவா் நந்தகுமாா் (38) பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுமி, கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்த சிறுமி தெரிவித்த தகவலின்பேரில் போலீஸாா் நந்தகுமாரை போக்ஸோவில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

Advertisement