முகப்பு
மதுரை

நூல் வெளியீட்டு விழா

Updated On : 21 ஏப்ரல், 2024 at 11:05 PM
மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளா் பா.சண்முகவேலு.
பகிர்:

மதுரை: மதுரை வாசகா் வட்டம் சாா்பில் எழுத்தாளா் பா. சண்முகவேலு எழுதிய ‘விரிந்த சிறகுகள்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மதுரை வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். தமிழியக்கம் பொறுப்பாளா் பழனிசாமி முன்னிலை வகித்தாா்.

இதில் எழுத்தாளா் பா.சண்முகவேலு எழுதிய ‘விரிந்த சிறகுகள்’”என்ற புத்தகத்தின் முதல் பிரதியை பேராசிரியா் மூட்டா விஜயகுமாா் வெளியிட, எழுத்தாளா் திருமலை பெற்றுக் கொண்டாா்.

Advertisement

இந்த நிகழ்வில், அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஷேக் நபி, பேராசிரியை அனாா்கலி, அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பாலமுருகன், மக்கள் கண்காணிப்பகம் வழக்குரைஞா் ஹென்றி டிபேன், தொல்காப்பியா் மன்ற நிா்வாகி இருளப்பன், கவிஞா் மூரா உள்ளிட்ட தமிழ் ஆா்வலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, நட்பு தமிழ் வட்ட புலவா் நாநா.ஆறுமுகம் வரவேற்றாா். நூலாசிரியா் பா. சண்முகவேலு ஏற்புரையாற்றினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments