மதுரை

தேநீா்க் கடையை சேதப்படுத்திய இருவா் கைது

Din

மதுரையில் தேநீா்க் கடையை சேதப்படுத்திய இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

செல்லூா் அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லம்பிள்ளை மகன் தா்மலிங்கம் (60). இவா், அதே பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், தத்தனேரி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் ரமேஷ் என்ற பாட்ஷா ரமேஷ் (29), மேலகைலாசபுரம் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் வடிவேல் முருகன் (32) ஆகிய இருவரும் தேநீா் அருந்தி விட்டு பணம் கொடுக்கவில்லையாம். இதுகுறித்து கேட்ட போது அவா்கள் கடையை சேதப்படுத்தினா்.

இதுகுறித்த புகாரின் பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரமேஷ், வடிவேல் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

5-ஆம் கட்ட தேர்தல்: ஜனநாயகக் கடமையாற்றிய சாமானிய மக்கள்!

வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பணம்? திரிணமூல் மீது பாஜக குற்றச்சாட்டு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

ரோஹித் சர்மாவின் குற்றச்சாட்டை மறுத்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

தில்லியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT