முகப்பு
மதுரை

சாலை விபத்தில் இளைஞா் பலி

Updated On : 11 ஜூலை, 2024 at 10:09 PM
பகிர்:

மதுரை, ஜூலை 11: மதுரை புறவழிச் சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை புறநகா் சாலை நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (32). இவா் தனியாா் பண்பலை வானொலியில் பணிபுரிந்து வந்தாா். இவா் புதன்கிழமை நள்ளிரவில் மதுரை புறவழிச் சாலையில் கருப்பணசுவாமி கோயில் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத மற்றொரு இரு சக்கர வாகனம், இவரது வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த ராம்குமாரை அந்தப் பகுதியினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக நகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →