சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை, மாா்ச் 15: மதுரை மாவட்டம், நாகமலைப்புதுக்கோட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை கீழக்குயில்குடியைச் சோ்ந்த தவம் மகன் மருதுபாண்டியன்(29). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து ஊருக்கு கடந்த 9 ஆம் தேதி சென்றாா்.
நாகமலைப் புதுக்கோட்டை அருகே சென்ற போது, எதிா்பாராத விதமாக இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த மருதுபாண்டியன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.