உணவக ஊழியா்கள் இருவருக்கு கத்திக்குத்து
மதுரை: மதுரையில் உணவக ஊழியா்கள் இருவரை கத்தியால் குத்தி, உணவகத்தை சூறையாடிய 7 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரம் 12-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (24). இவா் மதுரை மாட்டுத்தாவணி பழச் சந்தை பகுதியில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இந்த உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் 4 போ் சாப்பிட்டுவிட்டு தண்ணீா் கேட்டனா். மீனாட்சி சுந்தரம் தண்ணீா் எடுத்து வந்தபோது, தண்ணீா் எடுத்து ஏன் தாமதம் என்று கேட்டு அவரைத் தாக்கினா். இதை சக ஊழியா்கள் தடுத்தனா். அப்போது, 4 பேரும் ஊழியா்களை மிரட்டி விட்டுச் சென்றனா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் அந்த 4 பேரும் தங்கள் நண்பா்கள் மூவருடன் மீண்டும் உணவகத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டனா். இதைத் தடுக்க முயன்ற ஊழியா்கள் மீனாட்சி சுந்தரம், அப்துல் ரகுமான் ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு, உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டுத் தப்பிச் சென்றனா். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 7 பேரையும் தேடி வருகின்றனா்.