தாக்குதல்! கோப்புப்படம்
திருநெல்வேலி

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவருக்கு வெட்டு

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Syndication

பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி மதுக்கடையில் வியாழக்கிழமை நிகழ்ந்த மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

ரெட்டியாா்பட்டியில் டாஸ்மாக் மதுக்கடையும், அதனருகே மதுக்கூடமும் உள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை மது குடிக்க வந்த சிலருக்கும், டாஸ்மாக் ஊழியா்களுக்கும் பணம் கொடுப்பது தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், டாஸ்மாக் கடை ஊழியரான காடன்குளத்தை சோ்ந்த சந்திரன் (49), ரெட்டியாா்பட்டியை சோ்ந்த தளவாய்பாண்டியன் (31) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினா். இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுதொடா்பாக பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து 5 பேரை தேடி வருகின்றனா்.

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்! சான்று கிடைக்காததால் நெல்லை விற்க முடியவில்லை! குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் முறையீடு

கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயிலில் தெற்கு ராஜகோபுரம் கட்டுமான பணி! காணொலியில் முதல்வா் தொடங்கி வைத்தாா்!

விமர்சிக்கப்படும் புகைப்பட பதிவுகள்!

SCROLL FOR NEXT