பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கிய அரசு வழக்குரைஞா்கள்
மதுரை: தமிழக முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி 101-ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அரசு வழக்குரைஞா்கள் 1,001 மஞ்சள் பை, பேனாக்களை திங்கள்கிழமை பொதுமக்களுக்கு வழங்கினா்.
முன்னதாக அரசு வழக்குரைஞா்களுக்கான அலுவலகத்தில் கருணாநிதி உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீரா கதிரவன், அரசு வழக்குரைஞா் திலக்குமாா், கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் அன்புநிதி உள்பட வழக்குரைகள் பலா் கலந்து கொண்டனா்.