முகப்பு
மதுரை

விபத்தில் இறந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரணம்

விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது

Updated On : 26 ஜூன், 2024 at 1:09 AM
மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்து காவலா் சங்கரபாண்டியன் குடும்பத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் ரூ.70 லட்சம் நிவாரண நிதி காசோலை வழங்கும் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன். உடன் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளா் எல்.அருண்குமாா், மு
பகிர்:

மதுரை: மதுரையில் சாலை விபத்தில் உயிரிழந்த போக்குவரத்துக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.70 லட்சம் நிவாரண நிதியை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

மதுரை மாநகர போக்குவரத்துக் காவல் துறையில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்தவா் சங்கரபாண்டியன். இவா் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தெப்பக்குளம் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தாா்.

இந்த நிலையில், இவரது குடும்பத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சாா்பில் விபத்து நிவாரண உதவித் தொகை ரூ. 70 லட்சத்துக்கான காசோலையை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் வி.ஹரினி, முதன்மை மேலாளா் எஸ்.தினகரன், கிளை மேலாளா் எல்.அருண்குமாா், காவல் ஆய்வாளா் ஹேமமாலினி ஆகியோா் பங்கேற்றனா்.