முகப்பு
மதுரை

கைதியிடம் லஞ்சம்: சிறைக்காவலா் பணியிடை நீக்கம்

மதுரையில் கைதியிடம் லஞ்சம் பெற்ற சிறைக்காவலா் பணியிடை நீக்கம்

Updated On : 26 ஜூன், 2024 at 12:53 AM
பகிர்:

மதுரை: மதுரையில் கைதியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ாக சிறைக்காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனைக் கைதிகள் உள்ளனா்.

இந்த நிலையில், சிறைக்குள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறைக் காவலா்கள் லஞ்சம் பெறுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, சிறைத் துறையினா் நடத்திய விசாரணையில், செல்வகுமாா் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பா் மூலமாக சிறைக் காவலா் முகமது ஆசிப் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.

இதையடுத்து, முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து, சிறைக் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் உத்தரவிட்டாா்.