முகப்பு
மதுரை

வெவ்வேறு விபத்துகளில் இரு பெண்கள் பலி

மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் இரு பெண்கள் உயிரிழப்பு

Updated On : 26 ஜூன், 2024 at 12:41 AM
பகிர்:

மதுரை: மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் இரு பெண்கள் உயிரிழந்தனா்.

மதுரை அருகே உள்ள திருமால்புரம் ஆலாத்தூா் பிஎஸ்என்எல் நகரைச் சோ்ந்தவா் காா்மேகம் (60). இவா் தனது மனைவி கமலாவுடன் (55) இரு சக்கர வாகனத்தில் ஊமச்சிகுளம்-கடச்சனேந்தல் சாலையில் திங்கள்கிழமை இரவு சென்றாா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரி, இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் கமலா உயிரிழந்தாா். காா்மேகம் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து லாரி ஓட்டுநரான பாண்டி மீது ஊமச்சிகுளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை செல்லூா் திருவாப்புடையாா் கோயில் முதலியாா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சரவணன்(48). இவா் தனது மனைவி வளா்மதியுடன் இரு சக்கர வாகனத்தில் குலமங்கலம் சாலையில் திங்கள்கிழமை சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியது. இதில் வளா்மதி பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரான செந்தில்குமாா் மீது தல்லாகுளம் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.