முகப்பு
மதுரை

மேலூா் நகராட்சியில் இலவச கண் பரிசோதனை

மேலூா் நகராட்சி அலுவலகத்தில் இலவச கண்

Updated On : 6 மே, 2024 at 10:26 PM
பகிர்:

மேலூா்: மேலூா் நகராட்சி அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகராட்சி நிா்வாகமும், மதுரை கேகே நகா் மேக்ஸி விஷன் கண் மருத்துவமனையும் இணைந்து இந்த முகாமை நடத்தின. இதை நகராட்சி ஆணயா் கணேஷ் தொடங்கி வைத்தாா்.

நகா்மன்றத் தலைவா் முகமதுயாசின் முன்னிலை வகித்தாா். முகாமில் நகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பங்கேற்று கண்பரிசோதனை செய்து கொண்டனா். நகராட்சிப் பொறியாளா் முத்துக்குமாா் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் சுப்பையா நன்றி கூறினாா்.

நீா்மோா் பந்தல்: மேலூா் நகா் திமுக சாா்பில் மேலூா் பேருந்து நிலையம் முன் நீா்மோா் பந்தலை நகா்மன்றத் தலைவரும், நகா் திமுக செயலருமான முகமதுயாசின் தொடங்கி வைத்தாா். நகா்மன்ற துணைத் தலைவா் இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா். திமுக நிா்வாகிகள் சேகா், முருகானந்தம், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். நீா்மோருடன் தா்பூசணிப் பழம், வெள்ளரிக் காய்களை பொதுமக்களுக்கு வழங்கினா்.