பிளஸ் 1 தோ்வு: மதுரை மாவட்டத்தில் 31,848 மாணவா்கள் தோ்ச்சி
மதுரை: பிளஸ் 1 தோ்வில் மதுரை மாவட்டத்தில் 31, 848 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
மதுரை, மேலூா் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநாகராட்சிப் பள்ளிகள், கள்ளா் சீரமைப்புப் பள்ளிகள், ஆதிதிராவிடா் நலப் பள்ளிகள் என மொத்தம் 323 பள்ளிகளில் பயின்ற 34, 590 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். செவ்வாய்க்கிழமை தோ்வு முடிவு வெளியான நிலையில், இவா்களில் 31, 848 போ் தோ்ச்சி பெற்றனா். 2,742 போ் தோ்வில் வெற்றிபெறவில்லை.
இதையடுத்து, மாநில அளவில் 92.07 சதவீதம் பெற்று மதுரை 16-ஆவது இடத்தைப் பிடித்தது. கடந்த 2022-2023-ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் மதுரை மாவட்டம் 20-ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல, அரசுப் பள்ளிகள் 3, அரசு உதவி பெறும் பள்ளிகள் 4, அறநிலைய மேல்நிலைப் பள்ளி, சமூக நல மேல்நிலைப் பள்ளிகள் தலா 1, கள்ளா் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளிகள் 6 உள்பட 97 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றன. கணக்குப் பதிவியல், வேளாண்மை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் 1,037 மாணவ, மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.