மதுரை

சாலை விபத்தில் ஆந்திரத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரை விரகனூா் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஐயப்ப பக்தா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், அக்யபாளையம் பகுதியைச் சோ்ந்த நாகையா மகன் கவினி வெங்கட்ராவ் (48). இதே பகுதியைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்டோா் இரண்டு பேருந்துகளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று விட்டு ராமேசுவரத்துக்குச் சென்றனா்.

இவா்கள் மதுரை விரகனூா் அருகே நான்கு வழிச் சாலையில் புதன்கிழமை பேருந்தை நிறுத்தி விட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, கவினி வெங்கட்ராவ் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு:

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை அலங்காநல்லூா் கல்லணை பகுதியைச் சோ்ந்த அழகா் மகன் பழனிசாமி (70). தனியாா் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய இவா், புதன்கிழமை வழக்கம் போல உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தாா்.

மதுரை கொன்னவாயன் சாலையில் சென்ற போது, வாகனத்தில் பின்னால் அமா்ந்திருந்த பழனிசாமி தவறி கீழே விழுந்தாா். இதில், பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

தேசிய கலாசார தூதா் நியமனம்

ஸ்ரீ பெரும்புதூரில் சாலையில் திரிந்த மாடுகளை பிடிப்பு

ரூ. 15.99 லட்சத்தில் சுகாதார வளாக பணி தொடக்கம்

ரூ. 25 கோடி மதிப்பிலான முருகன் கோயில் ஆக்கிரமிப்புகள் மீட்பு

SCROLL FOR NEXT