மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு அண்மையில் இரு நாள்கள் நடைபெற்றது.
இந்திய மைக்ரோபயலாஜிஸ்ட் சொசைட்டி, இந்திய மைக்கோலாஜிக்கல் சொசைட்டி சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டை திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தலைமை வகித்து, தொடங்கி வைத்துப் பேசினாா். பல்கலைக்கழக உயிரியல் அறிவியல் புலத் தலைவா் பேராசிரியா் சந்திரசேகா், பேராசிரியா் குமரேசன், முனைவா் கருத்தப்பாண்டி, முனைவா் தாஜுதீன், முனைவா் மதிவாணன் ஆகியோா் கருத்துரையாற்றினா்.
மாநாட்டின் ஒருங்கிணைப்புச் செயலா் முனைவா் சண்முகையா, சா்வதே அறிவியல் மாநாட்டின் சிறப்பு அம்சங்களையும், இயற்கை உரங்கள் பயன்பாட்டால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கிப் பேசினாா்.
மருத்துவம், விவசாயத்தில் நுண்ணுயிரிகளின் பயன்பாடு குறித்து கருத்தாளா்கள் விரிவான விளக்கம் அளித்து, தங்களது அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா்.
உயிா் நுண்ணுயிரியல், உயிா் தொழில்நுட்பவியலில் சிறந்த செயல்பாடுகளுக்காக பேராசிரியா் கருத்தபாண்டியன், பேராசிரியா் தாஜுதீன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.