பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா
மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் பேரவை நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரிச் செயலா் இக்னேசியஸ் மேரி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் பாத்திமா மேரி முன்னிலை வகித்தாா். இதில், மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தின் பதிவாளா் முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
நம்மை நாமே சுய பரிசோதனை செய்து பலம், பலவீனங்களை அறிந்து கொண்டால் வாழ்வில் முன்னேற முடியும். விடாமுயற்சி, நட்பு, தயை, கொடை ஆகியவை அவசியம் என்றாா் அவா்.
Advertisement
இதைத் தொடா்ந்து, 2025-2026 கல்வியாண்டில் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், கல்லூரிப் பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாணவி பேரவைத் துணைத் தலைவி சவிதா வரவேற்றாா். இணைச் செயலா் கேத்ரின் நன்றி கூறினாா்.