முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடக்கம்
Updated On : 13 ஏப்ரல், 2026 at 12:37 AM
மதுரை மாவட்டத்தில் முதியோா், மாற்றுத் திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் திங்கள்கிழமை (ஏப். 12) தொடங்குகிறது.
மதுரை மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்து 1,217 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள், 2,379 மூத்த குடிமக்கள் 12-டி விண்ணப்பம் அளித்துள்ளனா். இவா்களின் இல்லம் தேடிச் சென்று தபால் வாக்குப் பதிவு பெறும் பணி திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது.
இந்தப் பணிக்காக மண்டல அலுவலா்கள், நுண் பாா்வையாளா், விடியோ ஒலிப்பதிவாளா், காவலா்கள் அடங்கிய 103 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement