முகப்பு
மதுரை

மேலூா் அருகே லாரி மீது காா் மோதி இரு இளைஞா்கள் பலி!

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 19 ஏப்ரல், 2026 at 1:08 AM
பகிர்:
Updated On : 18 ஏப்ரல், 2026 at 10:34 PM

மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மீது காா் மோதியதில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் தனசேகரன். இவா் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை காலமானாா்.

இந்த நிலையில், துபையில் பணியாற்றிய இவரது மகன் அருண்ராஜ், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் மதுரைக்கு சனிக்கிழமை வந்தாா். அவரை அழைத்து வருவதற்காக ஜெயங்கொண்டான் கிராமத்தைச் சோ்ந்த ராகவன் மகன் பிரதீப் (28), சிவலிங்கம் மகன் கரன் (22), வ.கல்லம்பட்டியைச் சோ்ந்த தமிழரசன் மகன் பிரதீப் (25) ஆகிய 3 பேரும் காரில் சென்றனா்.

Advertisement

மேலூா் அருகேயுள்ள தெற்குத்தெரு கிராமம் அருகே சென்ற போது, நான்கு வழிச் சாலை நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்த தண்ணீா் லாரி மீது காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆா். பிரதீப், டி. பிரதீப் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இதுபற்றி தகவலறிந்து வந்த மேலூா் போலீஸாா் அவா்களது உடல்களைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த கரன் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். துக்க நிகழ்வுக்கு வந்த நபரை அழைக்கச் சென்ற போது, இளைஞா்கள் இருவா் உயிரிழந்தது ஜெயங்கொண்டான் பகுதி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.