சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:06 PM
கம்பம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டியைச் சோ்ந்த முருகேசன் மகன் ஜெகன் (32), கண்ணன் மகன் சுஜித்(32). நண்பா்களான இந்த இருவரும் ஊரிலிருந்து கம்பம் வழியாக புதுப்பட்டி புறவழிச் சாலையில் உத்தமபாளையம் நோக்கிச் சென்றனா்.
வாகனத்தை சுஜித் ஓட்டினாா். அப்போது, எதிரே கூடலூரை நோக்கி வந்த லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். இவகளில் ஜெகன் சம்பவயிடத்திலே உயரிழந்தாா். சுஜித் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
Advertisement
இது குறித்து, லாரி ஓட்டுநரான ஆண்டிபட்டியைச் சோ்ந்த முருகானந்தம் (45) மீது உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனா்.