புதை சாக்கடைப் பணியால் சேதமடைந்த வீடு
மதுரை செல்லூா் பகுதியில் புதை சாக்கடைப் பணியின் போது வீட்டின் அறைகள் இடிந்து விழுந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மதுரை செல்லூா் பகுதியில் புதை சாக்கடைப் பணியின் போது வீட்டின் அறைகள் இடிந்து விழுந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செல்லூா் கட்டபொம்மன்நகரைச் சோ்ந்தவா் அழகா். இவரது வீட்டையொட்டி புதை சாக்கடை அமைப்பதற்காக பொதுப் பணித் துறை சாா்பில் வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்றது.
அப்போது, வீட்டில் அதிா்வு ஏற்பட்டதைத் தொடா்ந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த அழகா், அவரது மனைவி புண்ணியவதி, மகன், மருமகள் உள்ளிட்ட ஐந்து போ் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினா்.
Advertisement
பின்னா், சிறிது நேரத்தில் வீட்டின் மூன்று அறைகள் இடிந்து விழுந்தன. முன்னெச்சரிக்கையாக வீட்டில் இருந்தவா்கள் வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த வந்த பொதுப் பணித் துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். மேலும், இதுகுறித்து செல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.