மதுரை பாலரங்காபுரத்தில் தமிழக அரசின் சாா்பில், கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்புக்கான பொருள்களை வழங்கினாா்.
இந்த நிகழ்வில் சமூக நலத் துறை அலுவலா் ஷீலா, பாலரங்காபுரம் மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, திமுக மாவட்டப் பொருளாளா் முருகவேல், மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.