மருத்துவமனையில் சிறைவாசி உயிரிழப்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைவாசி உயிரிழந்தாா்.
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:47 PM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறைவாசி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள நீராவி கிராமத்தைச் சோ்ந்தவா் வ. முத்துராமலிங்கம் (57). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், விசாரணை நீதிமன்றம் விதித்த தீா்ப்பின்படி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு முத்துராமலிங்கத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.