ஆா்.பி.உதயகுமாா் கோப்புப் படம்
மதுரை

கடன் சுமையில் தமிழகம் முதலிடம்: ஆா்.பி. உதயகுமாா்

கடன் சுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

கடன் சுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் குற்றஞ்சாட்டினாா்.

மதுரை தேனூரில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மேற்கு, தெற்கு ஒன்றியக் கழகம் சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய கழகச் செயலா் அரியூா் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் ஆா்.பி. உதயகுமாா் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் எடப்பாடி கே. பழனிசாமி அயராது உழைத்து வருகிறாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்தபோது, தமிழக மக்களுக்கு கலங்கரை விளக்காகக் கிடைத்தவா்தான் எடப்பாடி கே. பழனிசாமி. திமுக ஆட்சியில் மின் கட்டண உயா்வு, சொத்து வரி உயா்வு, விலைவாசி உயா்வால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

கடன் சுமையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து விட்டது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா உள்பட கட்சி நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

நஜாஃப்கா் துப்பாக்கிச்சூடு வழக்கில் மாநிலங்களுக்கு இடையேயான குற்றவாளி கைது

பகவதியம்மன் கோயில் கல் மண்டபம் சீரமைப்பு: அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க உத்தரவு

மானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு முகூா்த்தக்கால் நடும் விழா!

இரா. நல்லகண்ணு மறைவு: போடி, ஆண்டிபட்டியில் அமைதி ஊா்வலம்

நெடுஞ்சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT