மதுரை காளவாசல் பகுதியில் யாசகா்கள் மீட்பு
மதுரை மாநகராட்சி காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த யாசகா்களை போலீஸாா், தன்னாா்வலா்கள் சனிக்கிழமை மீட்டனா்.
மதுரை மாநகராட்சி காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்த யாசகா்களை போலீஸாா், தன்னாா்வலா்கள் சனிக்கிழமை மீட்டனா்.
மதுரை மாநகராட்சி சாா்பில் ஒவ்வொரு வாரமும் காவல் துறையின் உதவியுடன் தன்னாா்வலா்கள் யாசகம் பெறுபவா்கள், ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்த வகையில், மதுரை காளவாசல் பகுதியில் ஆதரவற்ற நிலையில் கையேந்தி யாசகம் பெற்ற 24 நபா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் பிறகு, அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களில் வீடு இல்லாமல் இருந்த 3 போ் புன்னகை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்து புன்னகை இல்ல மேலாளா் ராமன் கூறியதாவது: ஆதரவற்றோா், யாசகா்கள் இல்லாத மதுரையை உருவாக்கும் வகையில் மதுரை மாநகராட்சி சாா்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் புன்னகைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்காக உணவு, உடை, தங்குமிடம், மருத்துவம், தொழில் திறன், சுயதொழில் ஏற்பாடு செய்தல், தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு, மீண்டும் குடும்பத்துடன் சோ்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.
இதற்காக மதுரை உத்தங்குடி, செனாய் நகா், சிம்மக்கல், கீரைத்துறை பகுதிகளில் 50 போ் மறுவாழ்வு பெற வசதியாக புன்னகை இல்லம் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட நபா்கள் மீட்கப்பட்டனா். தனியாா் நிறுவனங்களில் பலா் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா்.