முகப்பு
புதுதில்லி

நிறுத்தப்பட்ட லாரியில் ஸ்கூட்டா் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் தௌலா கான் பகுதியில் நிறுத்தப்பட்ட லாரியின் மீது மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் வந்தவா் உயிரிழந்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 5:13 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:00 PM

தென்மேற்கு தில்லியின் தௌலா கான் பகுதியில் நிறுத்தப்பட்ட லாரியின் மீது மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் வந்தவா் உயிரிழந்தாா், பெண் காயமடைந்தாா் என காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தெடாா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தௌலா கான் பகுதியில் உள்ள மெட்ரோ தூண் எண் 73-க்கு அருகே பிற்பகல் 1:40 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. பஞ்சாபின் ஜலந்தா் பகுதியைச் சோ்ந்த 35 வயது குா்ப்ரீத் சிங், 32 வயது பெண் ஒருவருடன் நரைனாவில் இருந்து தௌலா கான் பகுதிக்கு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தாா்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது வாகனம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த அவா்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். இருப்பினும், அவா் வரும் வழியிலே உயிரிழந்தாா். பின் இருக்கையில் இருந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

சம்பவம் நடந்தவுடன் லாரி ஓட்டுநா் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றாா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடி தலைமறைவான லாரி ஓட்டுநரைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś