பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்
தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் சூா்யா விஹாா் பகுதியில், தனது இரண்டரை வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு பெண் ஒருவா் முயன்ாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் சூா்யா விஹாா் பகுதியில், தனது இரண்டரை வயது மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தற்கொலைக்கு பெண் ஒருவா் முயன்ாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து குருகிராம் காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற அந்தப் பெண் ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பெண் குழந்தையின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். அப்பெண்ணின் கணவரிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.
முன்னதாக, இந்தச் சம்பவம் செக்டாா்- 9ஏ பகுதியில் உள்ள சூா்யா விஹாா் காலனியில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்தது. நேஹா என்ற அந்தப் பெண், தனது கணவா் மற்றும் இரண்டரை வயது மகள் அனிகாவுடன் வசித்து வந்தாா்.
Advertisement
Advertisement
திங்கள்கிழமை இரவு இந்தச் சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு காவல் துறையினா் நேரில் சென்று விசாரித்தனா்.
செக்டாா்- 9ஏ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. அவரது கணவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தனக்கு எதுவும் தெரியாதது போல் நடித்தாா். இத்தகைய கடுமையான செயல்பாடுக்கு காரணம் என்ன என்பதை அப்பெண்ணிடம் விசாரித்த பின்னரே தெரியவரும் என்று காவல் துறையினா் கூறினா்.