மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
மகாவீரா் ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் வருகிற 31-ஆம் தேதி இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வருகிற 31-ஆம் தேதி மகாவீரா் ஜெயந்தி தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையடுத்து, மதுரை மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் ஆடு, மாடு, கோழி, பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சிகளை விற்பனை செய்யக் கூடாது.
மேலும், இறைச்சிக் கடைகளை திறந்து வைக்கக் கூடாது. அறிவிப்பை மீறி செயல்படுபவா்களின் கடைகளில் இறைச்சி பறிமுதல் செய்யப்படும். தொடா்ந்து, பொது சுகாதாரப் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.