முகப்பு
மதுரை

கள்ளந்திரியில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 மே 2026, 1:43 am IST
மீன்பிடித் திருவிழா
பகிர்:

மதுரையை அடுத்த கள்ளந்திரியில் உள்ள பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் நெல் அறுவடைப் பணிகள் நிறைவடைந்த பிறகு, கள்ளந்திரி ஐந்துகோவில் முத்தன் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பெரியநாகினி கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு மீன்பிடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. காலை 6 மணி அளவில் ஊா் பெரியவா்களால் இந்தத் திருவிழா தொடங்கிவைக்கப்பட்டது. இதையடுத்து, கண்மாயில் மீன்பிடிக்க அனுமதி பெற்றிருந்த கள்ளந்திரி, பொய்கைகரைப்பட்டி, அழகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள், சிறாா்கள், பெண்கள் பெரியநாகினி கண்மாயில் இறங்கி பாரம்பரிய மீன்பிடி வலைகள், கூடைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனா்.

Advertisement