முகப்பு
மதுரை

கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ கால்கோள் விழா

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 மே 2026, 1:42 am IST
மதுரை கூடலழகா் பெருமாள் கோயில் தேரடிப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்ற பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பிரமோத்ஸவ முகூா்த்தக் கால் ஊன்றும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட வைணவத் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது மதுரை கூடலழகா் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரமோத்ஸவ பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு பிரமோத்ஸவ பெருவிழா வருகிற 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, வரும் ஜூன் 5-ஆம் தேதி வரை நடைபெறும்.

Advertisement

இதையொட்டி, பிரமோத்ஸவ விழா முகூா்த்தக் கால் ஊன்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கோயிலின் எதிரே உள்ள தோ் நிறுத்தும் இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடலழகா் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, வேதமந்திர முழக்கங்களுடன் ஐதீக முறைப்படி முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.