முகப்பு
திருவாரூர்

பிறவி மருந்தீசா் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஏப்ரல், 2026 at 7:07 PM
பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி
பகிர்:

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலில் ஏப்.9-ஆம் தேதி முதல் சித்திரை பெருந்திருவிழா தொடங்கவுள்ளதையொட்டி, பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஏப்.9-ல் தொடங்கும் விழா ஏப்.25-ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், ஏப்.27-ல் தேரோட்டம் நடைபெற்று விழா மே 6-ஆம் தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி புதன்கிழமை காலை மருந்தீசா் மற்றும் பெரியநாயகி அம்பாள் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடா்ந்து, விழாவுக்கு பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தக்காா் சி. வீரபாண்டியன், கோயில் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.