முகப்பு
மதுரை

மதுரையில் கோயில் அருகே சிறுவன் கொலை: 5 போ் கைது

Updated On : 26 மே 2026, 12:54 am IST
கொலை செய்யப்பட்ட குபேந்திரன்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வாகனக் காப்பகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை உடலில் காயங்களுடன் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விளக்குத்தூண் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

விசாரணையில், உயிரிழந்தவா் மதுரை வடக்கு மாசி வீதியைச் சோ்ந்த அழகுராஜா மகன் குபேந்திரன் (17) எனத் தெரியவந்தது. கடந்த மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது, குபேந்திரனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த முத்துமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த முன்விரோதம் காரணமாக, முத்துமணி (29), அவரது சகோதரா் ராஜூ (27), உறவினா்களான சதீஷ்குமாா் (25), ஹரிகிருஷ்ணன் (19), முத்துக்குமாா் (19) ஆகிய 5 பேரும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் குபேந்திரனை குத்திக் கொலை செய்தனா். இவா்கள் 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்றனா்.