ஒட்டன்சத்திரத்தில் வியாழக்கிழமை 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து ஒட்டன்சத்திரத்தில் உள்ள 18 வார்டுகளில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக கைராசி நகர் பகுதியில் நகராட்சி ஆணையர் எம்.இளவரசன் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி சுகாதாரஆய்வாளர் வீரபாகு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகானந்தம், தணிக்காசலம், முருகேசன், நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வீரப்பன், தலைமை நிலைய அலுவலர் ஈஸ்வரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.