திண்டுக்கல்

பைக்கில் இருந்து தவறி விழுந்து அரசு அலுவலர் சாவு

DIN

ஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த அரசு அலுவலர் புதன்கிழமை உயிரிழந்தார்.
 ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள பெரிய கரட்டுப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் முத்துராஜ் (44). இவர் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஆக. 15-ஆம் தேதி வடகாடு அடுத்துள்ள பெத்தேல்புரம் அருகே  நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் உதவிக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
 இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT