திண்டுக்கல்

பழனியில் மள்ளர் மீட்புக் களம் சார்பில் உண்ணாவிரதம்

DIN

பழனியில் மள்ளர் இனத்தை எஸ்சி பட்டியலில் இருந்து நீக்கி எம்பிசி பட்டியலில் சேர்க்கக் கோரி மள்ளர் மீட்புக்களம் சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பழனி மேற்குரத வீதியில் உள்ள தெய்வேந்திர குல வேளாளர் மடத்தில் கடந்த 20 ஆம் தேதி முதல் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதத்தில் மள்ளர் மீட்புக்கள தலைவர் செந்தில் மள்ளர், மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் பொதிகை தமிழ்மள்ளர், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பிரகாசன், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஈரோடு மாவட்டச் செயலர் கலையரசன், மருத்துவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT