முகப்பு
திண்டுக்கல்

சிறுநாயக்கன்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

பழனி சிறுநாயக்கன்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

பழனி சிறுநாயக்கன்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 இக்குளத்தின் கரையில் காமராஜ் நகர் உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலமுறை முயற்சி மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் ஆக்கிரமிப்பு அகற்றம் தாமதமாகி வந்தது.  இந்நிலையில் ஒரு வார காலத்தில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவும், அதற்கான வழிமுறைகள் கோரியும் மாவட்ட  ஆட்சியருக்கு அவர்கள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.  இதையடுத்து இப்பகுதியில் வரும் வாரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →