முகப்பு
திண்டுக்கல்

ராணுவப் பள்ளியில் சேர டிச.5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் சேர டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் சேர டிசம்பர் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  திருப்பூர் மாவட்டம் அமராவதி நகர் ராணுவ பள்ளியில் (சைனிக் பள்ளி) 2018-19 கல்வியாண்டில் 6 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு 2018 ஜனவரி 7ஆம் தேதி குறிப்பிட்ட மையங்களில் நடைபெற உள்ளது.  6ஆம் வகுப்பில் சேர 2007 ஜூலை 2 ஆம் தேதி முதல் 2008 ஜூலை 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். 9ஆம் வகுப்பில் சேர 2004 ஜூலை 2-ஆம் தேதி முதல் 2005 ஜூலை 1ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மற்றும் விண்ணப்ப படிவங்கள் குறித்த விவரங்களை சைனிக் பள்ளியின் ‌w‌w‌w.‌s​a‌i‌n‌i‌k‌s​c‌h‌o‌o‌l​a‌m​a‌r​a‌v​a‌t‌h‌i‌n​a‌g​a‌r.‌e‌d‌u.‌i‌n  என்ற இணையதளத்தின் மூலமாகவும், 04252-256246,  256296 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பம் நவம்பர் மாதம் இறுதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் டிசம்பர் 5ஆம் தேதிக்குள்  சென்றடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →