திண்டுக்கல்

நத்தம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

DIN

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள கரந்தமலை பகுதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணக்காட்டூர்- ஆலம்பட்டி இடையே கரந்தமலை பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர், கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, நத்தம் வட்டாட்சியர் ராமையா, வருவாய் ஆய்வாளர் இளஞ்செல்வன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும், சடலத்தை கைப்பற்றிய நத்தம் போலீஸார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT