திண்டுக்கல்

பழனி தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளை பராமரிக்க கோரிக்கை

DIN

பழனி தெருக்களில் சுற்றித் திரியும் கழுதைகளை பராமரிக்க அவற்றின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியில் நகரெங்கும் சாலைகளில் அனாதையாக விடப்படும் மாடுகள், குதிரைகள் மற்றும் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் பொதி சுமக்க பயன்படுத்தப்படும் கழுதைகளை அவற்றின் உரிமையாளர்கள் பராமரிக்காமல் விட்டு விடுவதால் அவை உணவுக்காக வீதிகளில் அலையத் தொடங்கியுள்ளன. குப்பைமேடுகளில் சுற்றித்திரியும் இவற்றை நாய்கள் துரத்துவதுடன், சாலைகளில் வீசப்படும் பாலித்தீன் பைகளை உணவாக உட்கொள்வதால் அவற்றின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பினர் (புளூ கிராஸ்) கழுதை வளர்ப்போரை அழைத்து அவற்றை பட்டியில் அடைத்து பராமரிக்க அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

SCROLL FOR NEXT