ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள நீலமலைக்கோட்டை குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (52). இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டும், கண்பார்வை குறைபாடுடனும் இருந்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி வீட்டை வீட்டுச் சென்றவர் மறுபடியும் வீடு திரும்பவில்லையாம்.
அதையடுத்து, அதே ஊரில் உள்ள நீலமேகம் என்பவரது தோட்டத்து கிணற்றில் மூழ்கி உயிரிழந்து கிடப்பது செவ்வாய்கிழமை தெரியவந்தது. அவருடைய சடலத்தை மீட்டு, ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.