திண்டுக்கல்

கார்கள் திருடியவர் கைது

DIN

பழனியில் இரு இடங்களில் கார் திருடிய நபர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
பழனியில் கார்கள் விற்கும் இடத்தில் ஒரு காரும்,  திருநகரில் முன்னாள் கவுன்சிலர் ஒருவரின் காரும் கடந்த சில நாள்களுக்கு முன் காணாமல் போயின.  இதுகுறித்து பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை சத்திரப்பட்டி அருகே வாகனத் தணிக்கையின் போது அவ்வழியே காரில் வந்த கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த பெருமாள் மகன் சுரேஷ்(35) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கார் திருடுபவர் என்பதும் பழனி பகுதியில் காணாமல் போன இரு கார்களையும் அவர் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.  இதையடுத்து ஆயக்குடி போலீஸார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு கார்களையும் மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT