பழனியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வம். கூலித் தொழிலாளி. இவரது மகன் ஹரிவிஷ்ணு (7) . அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3 நாள்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிவிஷ்ணு, பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இங்கு போதிய சுகாதாரமின்மை மற்றும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதனாலேயே பள்ளி மாணவர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றனர்.