திண்டுக்கல்

பழனியில் மர்மக் காய்ச்சலால் பள்ளி மாணவர் சாவு

DIN

பழனியில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதன்கிழமை இரவு பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
    பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வம்.  கூலித் தொழிலாளி.  இவரது மகன் ஹரிவிஷ்ணு (7) .  அங்குள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3  நாள்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஹரிவிஷ்ணு, பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இங்கு போதிய சுகாதாரமின்மை மற்றும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகியுள்ளது. இதனாலேயே பள்ளி மாணவர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT