திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

DIN

திண்டுக்கல் மாவட்டம்,  வேடசந்தூர் அருகே வியாழக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ. 30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 ஸ்ரீராமபுரம் மரியமங்கலபுரத்தைச் சேர்ந்தவர் க.அய்யாவு (56). இவரது வீட்டின் அருகே 3 வீடுகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில்,  அய்யாவு மற்றும் பக்கத்து வீடுகளைச் சேர்ந்த அனைவரும் தோட்ட வேலைக்காக வியாழக்கிழமை சென்றுள்ளனர்.
        பின்னர், மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்த போது அங்கிருந்து 3 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதை அய்யாவு பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.30ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை அந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது.
 இதுகுறித்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் அய்யாவு அளித்த புகாரின்பேரில்,  மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT