முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் கடைகளின்  பூட்டை உடைத்து பணம் திருட்டு

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை இரவு மளிகை மற்றும் மருந்துக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிய  மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:59 AM
பகிர்:

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை இரவு மளிகை மற்றும் மருந்துக் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை திருடிய  மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் சாலையில் மருந்துக்கடை வைத்திருப்பவர் கடற்கரை (45). ,அதே போல காய்கறி சந்தை சாலையில் மருந்துக்கடை வைத்திருப்பவர் திருமலைசாமி (60). ஒட்டன்சத்திரம்-வேடசந்தூர் சாலை சோதனைச்சாவடி அருகே மளிகைக்கடை வைத்திருப்பவர் ஜோசப் (40). 
இவர்களது கடைகளிலும், காமாட்சியம்மன் கோயில் எதிரே உள்ள மோட்டார் கடை மற்றும் செருப்புக் கடைகளிலும் சனிக்கிழமை இரவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். இக்கடைகளில் ரூ.50 ஆயிரம் வரை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.