கொடைக்கானல் அருகே இலவச மருத்துவ முகாம்
கொடைக்கானல் அருகே குண்டுபட்டியில் இலவச மகப்பேறு மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
கொடைக்கானல் அருகே குண்டுபட்டியில் இலவச மகப்பேறு மற்றும் பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வத்தலகுண்டு லியோனார்டு மருத்துவமனை மற்றும் தீபகம் நலவாழ்வு மையம் இணைந்து நடத்திய இம் முகாமில் அருட்சகோதரி தங்கம் வரவேற்றார். மருத்துவர் வசந்தா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கர்ப்பிணிப் பெண்கள், மகப்பேறு பிரச்னை உடையவர்கள் மற்றும் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும் பல், கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், இருதய நோய், சிறுநீரக பாதிப்பு, மூலம், ஆஸ்த்துமா, சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு ஆலோசனைகள் மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் 25-க்கும் மேற்பட்ட தீபகம் தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர். அருட் சகோதரி மேரி நன்றி கூறினார்.