மேட்டுப்பட்டியில் பாஸ்கு திருவிழா
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவில் உயிர்த்த ஏசுவின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி பாஸ்கு திருவிழாவில் உயிர்த்த ஏசுவின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை திருத்தலத்தில் 328ஆம் ஆண்டு பாஸ்கு திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தூம்பா ஊர்வலம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உதவிப் பங்குத்தந்தை சேசுதாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் உயிர்த்த ஆண்டவரின் ரத பவனி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. முன்னதாக திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி நற்கருணை ஆசி வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத பவனியை வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.