திண்டுக்கல்

பழனி சிறப்புக் காவல் படை 14 ஆம் அணி உதய விழா

DIN

பழனியில் புதன்கிழமை தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ஆம் அணியின் 12 ஆவது ஆண்டு உதய விழா நடைபெற்றது. 
        பழனி-புதுதாராபுரம் சாலையில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இங்கு, காவலர் பயிற்சிப் பள்ளியும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 14 ஆம் அணி துவங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவு பெற்று 12 ஆம் ஆண்டு உதயமாவதை முன்னிட்டு, புதன்கிழமை மாலை உதய விழாநடைபெற்றது. மதுரை தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.  காவலர்களின் சீருடை அணிவகுப்புடன் நிகழ்ச்சி துவங்கியது. இதில் காவலர்களின் கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளும் நடைபெற்றன. காவலர்களின் குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா நிறைவில், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT