திண்டுக்கல்

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி மூதாட்டி பலத்த காயம்

DIN

கொடைக்கானலில் வியாழக்கிழமை காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தார்.
 கொடைக்கானல் அருகே ரைபிள்ரேஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினாள் (60). இவர் கடைக்குச் சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த காட்டெருமை அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்காக பெற்று வருகிறார். 
இதுகுறித்து வனத்துறை அலுவலர் ஒருவர் கூறும் போது உணவுக்காக நகர் பகுதிக்குள் வரும் காட்டெருமைகள் குறித்து தகவல் தெரிவித்தால் அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT